ஓட்டன்சத்திரம், செப். 20: ஒட்டன்சத்திரம் பழநி செல்லும் சாலையில் உள்ள அரச பிள்ளைபட்டி ரயில்வே கிராசிங் பாதை உள்ளது. இப்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 20.09.2023 நாளை மறுநாள் 22.09.23 ஆகிய தேதிகளிலும் காலை 9:00 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படுகிறது. இதனால் பழனி மார்க்கமாக செல்லும், பேருந்துகள், கார், டூவீலர்கள், கனரக லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் புதிய பைபாஸ் சாலையை பயன்படுத்தி செல்லுமாறு ஒட்டன்சத்திரம் ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசபிள்ளைபட்டி ரயில்வே பாதை மூடல்
previous post