அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை மக்கள் ஆடல், பாடல் மற்றும் கண்கவர் பேரணியுடன் கொண்டாடியுள்ளனர். அந்த நாட்டின் பாதுகாவராக கருதப்படும் பாட்ரிக் உயிரிழந்த மார்ச் 17ம் தேதியை மக்கள் புனித பாட்ரிக் தினமாக கடைபிடிக்கின்றனர். அவரை கௌரவிக்கும் வகையில் அந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாக அறிவித்துள்ள அயர்லாந்து அரசு பாரம்பரிய முறைப்படி கொண்டாடி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டும் இந்த விழாவை முன்னிட்டு டுப்ளின்னில் திரண்ட மக்கள் கண்கவர் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
previous post