திருப்புத்தூர், ஏப்.14: திமுக முன்னாள் அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.தென்னரசின் 32வது நினைவு தினத்தையொட்டி நேற்று திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் உள்ள அவரது நினைவிடத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக திருக்கோஷ்டியூரில் உள்ள எஸ்.எஸ்.தென்னரசு இல்லத்தில், அமைச்சர் பெரியகருப்பன், அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து அமைச்சர் தலைமையில் திமுக நிர்வாகிகள் தானிபட்டியில் உள்ள தென்னரசுவின் நினைவிடத்திற்கு பேரணியாக சென்று, அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் மு.தென்னவன், திமுக மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, முன்னாள் எம்எல்ஏக்கள் வி.பி.ராஜன், மதியரசன், திருப்புத்தூர் திமுக ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான சண்முகவடிவேல், மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானிகணேசன், திருப்புத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, துணைத் தலைவர் கான்முகமது, திருப்புத்தூர் நகர் செயலாளர் கார்த்திகேயன், நகர் துணைச்செயலாளர் உதயசண்முகம், நகர் பொருளாளர் பிச்சைமுகமது, ஒன்றிய பொருளாளர் கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் பார்த்தசாரதி, திருப்புத்தூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் நேரு, பசீர் அகமது, சரண்யா ஹரி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.புதூர் கண்ணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.