திருப்பூர், ஏப்.17: திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் வரை, குடிநீர் தேவைக்காக, அமராவதி அணையில் இருந்து, ஆற்று மதகு வழியாக அமராவதி ஆற்றில் வரும் 21-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நாளொன்றுக்கு 200 கன அடி வீதம் 86.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அணையின் நீர் இருப்பு மற்றும் வரத்தினை பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.