இடைப்பாடி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு, பாமக சார்பில் வெள்ளாண்டிவலசை காளியம்மன் கோயில், பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கினர். பஸ் நிலையத்தில் 500 பேருக்கு மரக்கன்றுகள், இனிப்புகள், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால், பன் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பாமக நகர செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் குமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்குமார், டாக்டர் கோகுலகிருஷ்ணன், நகர தலைவர் துரைசாமி, வன்னியர் சங்க தலைவர் முருகேசன், நகர செயலாளர் ரங்கநாதன், குணசேகரன், மூர்த்தி, ரவிக்குமார், மோகன்ராஜ், அய்யாசாமி, மாரியப்பன், வைத்தி, வக்கீல் ராஜா, சுகுமார், குமரேசன், தனபால், செல்வி மணி, சந்திரன், வேலு, ராஜூ, மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.