தூத்துக்குடி:தூத்துக்குடியில் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களின் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். சரண் விடுப்பு பணப்பலனை வழங்க வேண்டும். 7வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெரும் பிரிவினரை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து அரசு அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
previous post