காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் பஸ் நிலையத்தில், அதிமுகவின் 52ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவரும், செயலாளருமான பையூர் ரவி வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ தலைமை உரை ஆற்றினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், நகர செயலாளர் கேசவன், மாவட்ட மாணவரணி மோகன், மாவட்ட கவுன்சிலர் சங்கீதா கேசவன் முன்னிலை வகித்தனர். இதில் கோபிநாத், சிவாஜி சின்னப்பன், சமரசம், முன்னாள் எம்எல்ஏ சாகுல் ஹமீது, பிடிஎஸ் சுந்தரேசன், மதனகோபால் ஆகியோர் பேசினர்.