திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் கூட்டுறவு நகர வங்கி தலைவராக அதிமுகவை சேர்ந்த பாலசுப்பிரமணியம் உள்ளார். இதற்கு 2 கிளை வங்கிகள் உள்ளன. ஆண்டுதோறும் அறிவிப்பு வெளியிட்ட பின்னர் அதிகாரிகளால் வங்கி கணக்கு சோதனை செய்யப்படும். இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி இந்த வங்கிகளில் மத்திய ரிசர்வ் வங்கி சோதனைக்குழு அதிகாரி துரைசாமி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டது. இதில் நீண்ட நாட்களாக வரவு, செலவு நடைபெறாத வங்கிக்கணக்குகள் எத்தனை உள்ளன? அதிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக, கடந்த 1.4.2018 முதல் 31.3.2021 வரை எந்த வரவு, செலவும் இல்லாத வங்கி கணக்குகள் பற்றி 2 மணி நேரம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. …
அதிமுக நிர்வாகி தலைவராக உள்ள கூட்டுறவு நகர வங்கியில் அதிகாரி அதிரடி ரெய்டு: திருவில்லிபுத்தூரில் பரபரப்பு
previous post