ஏரல், மார்ச் 20: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஏரல் அருகேயுள்ள மாங்கொட்டாபுரம் சிவாவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளராக நியமனம் செய்துள்ளார். இதையடுத்து அவர், பண்டாரவிளையில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது வை. ஒன்றிய செயலாளர்கள் மேற்கு காசிராஜன், கிழக்கு அழகேசன், ஆழ்வை மேற்கு காசிராஜன், மாவட்ட விவசாய பிரிவு இணை செயலாளர்கள் ஜெயமுருகன், பால்துரை, ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், மற்றும் நிர்வாகிகள் மாங்கொட்டாபுரம் அம்பி, சிவகளை பரமசிவன், ரமேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.