சென்னை: அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நகைக்கடன் முறைகேடு குறித்த ஆய்வு 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். கூட்டுறவுதுறை அமைச்சர் பெரியசாமி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அளித்த பேட்டி: கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக வழங்கப்பட்ட தங்க நகை கடன் குறித்த ஆய்வு 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான 12 சதவீத வட்டி 7% ஆக குறைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். …
அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நகைக்கடன் முறைகேடு ஆய்வு 95% நிறைவு: அமைச்சர் பெரியசாமி தகவல்
previous post