சென்னை: அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் ஆணையத்தின்படி அதிமுக ஒருங்கிணைப்பாளராக தற்போது வரை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் பெயரில் உள்ள 3 கணக்குகள், அதிமுக தலைமைச் கழக கட்டட நிதி கணக்கு ஆகியவற்றை முடக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7 வாங்கிக்கணக்குகள், 2 வைப்பு நிதி கணக்குகளை முடக்க ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மதுரை பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ள அதிமுகவின் பாதுகாப்பு பெட்டக கணக்கையும் முடக்க ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை வங்கி கணக்குகளை முடக்கி வைக்க கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டவிதிகளை மீறி திண்டுக்கல் சீனிவாசனை அதிமுக பொருளாளராக நியமித்து உள்ளனர். தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை கட்சியின் பொருளாளர் தாம்தான். ஆணையம் இறுதி முடிவை அறிவிக்கும் வரை ஆர்பிஐ வங்கிகளுக்கு உரிய வழிகாட்டுதல் தர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்….