சென்னை: சென்னை பரங்கிமலை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(38). இவர் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கிருஷ்ணா கேட்டரிங் சைவ உணவகம் கேன்டீனில் மேலாளராக வேலை செய்து வருகிறார். வரவு செலவு கணக்குகளை லேப்டாப் மூலம் பார்ப்பார். கடந்த 12ம் தேதி கேன்டீனில் வைத்திருந்த விலை உயர்ந்த லேப்டாப் திடீரென மாயமானது. இதுகுறித்து கேன்டீன் மேலாளர் ராஜ்குமார் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், கேன்டீனில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த பிபுல்தாஸ்(36) என்பவர் திருடி சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் கேன்டீன் ஊழியரான பிபுல்தாஜை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பணியின் போது அடிக்கடி மேலாளர் ராஜ்குமார் திட்டியதால் அவரை பழிவங்க வேண்டும் என்று லேப்டாப்பை திருடியதாக ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து போலீசார் பிபுல்தாசை கைது செய்தனர்….