Thursday, May 16, 2024
Home » அஞ்சலக பெண் அதிகாரி மீது வழக்கு வேட்டவலம் அருகே பரபரப்பு சிறுசேமிப்பு கணக்கில் ₹46 ஆயிரம் கையாடல்

அஞ்சலக பெண் அதிகாரி மீது வழக்கு வேட்டவலம் அருகே பரபரப்பு சிறுசேமிப்பு கணக்கில் ₹46 ஆயிரம் கையாடல்

by Karthik Yash

வேட்டவலம், டிச.20: வேட்டவலம் அருகே அஞ்சலக சிறுசேமிப்பு கணக்கில் ₹46 ஆயிரம் கையாடல் செய்ததாக புகாரின்பேரில், பெண் அதிகாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே வெறையூர் அடுத்த அரடாப்பட்டு கிளை அஞ்சலகத்தில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அஞ்சலக அதிகாரியாக வெறையூர் கிராமத்தை சேர்ந்த ஜெயமணி(35) இருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வசந்தி என்பவரின் சிறு சேமிப்பு திட்ட கணக்கில் வரவு வைக்காமல் சுமார் ₹46 ஆயிரத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வசந்தி அஞ்சலக உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார். அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஜெயமணியை சஸ்பெண்ட் செய்தனர். மேலும் அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை அஞ்சலக உட்கோட்ட ஆய்வாளர் சவுடிராஜன் பணத்தை கையாடல் செய்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் அதிகாரி ஜெயமணி மீது நேற்று முன்தினம் வெறையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ ஏசுராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பணம் கையாடலில் அஞ்சலக பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

four × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi