ஷில்லாங்: அசாம்-மேகாலயா எல்லையில் வன்முறைக்கு வித்திட்ட முக்ரோ உட்பட 7 இடங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைப்பதற்கு மேகாலயா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அசாமில் இருந்து சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்களை ஏற்றி சென்ற லாரியை வனஅதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் கடந்த 22ம் தேதி அசாம் மற்றும் மேகாலயா மாநில எல்லையில் மோதல் வெடித்தது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தினால் இரு மாநில எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. தற்போது இந்த பதற்றம் தணிந்துள்ளது. இந்நிலையில் அசாம் – மேகாலயா எல்லையில் 7 இடங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைப்பதற்கு முன்மொழியப்பட்டது. இதற்கு மேகாலயா அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது….