தேனி, நவ. 8: தேனி மாவட்டம், போடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சியான அகமலை கிராம ஊராட்சி பெரியகுளம் அருகே உள்ளது. அகமலை கிராமத்தில் இன்று (8ம்தேதி) மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடக்க உள்ளது. இம்முகாமில், போடி தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் திட்ட உதவிகள், விபத்து நிவாரணம், விவசாயத் துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறுத் துறைகள் சார்ந்த கோரிக்கை மனுக்களை நேரில் மனுக்களாக கொடுக்கலாம். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
அகமலை கிராமத்தில் இன்று மக்கள் தொடர்பு முகாம்
previous post