சென்னை: அகத்தியர் மலையில் யானைகள் காப்பகம் ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தென்மாவட்ட யானைகள் வாழ்விடங்களை பாதுகாக்கும் பொருட்டு அகத்தியர் மலையில் யானைகள் காப்பகம் ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். விலங்குகளுக்கான அவசர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தேவைகளுக்கென என 3 உயர் வனவிலங்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் கோவை,திருநெல்வேலி,திருச்சி மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….