வத்தலக்குண்டு, ஜன. 21: வத்தலக்குண்டு ஒன்றியம் ரெங்கப்பநாயக்கன்பட்டியில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய நாடக மேடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மொக்கய தேவர் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, அதிமுக ஒன்றிய செயலாளர் மோகன், நகர செயலாளர் பீர் முகமது முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ தேன்மொழி சேகர் புதிய நாடக மேடையை திறந்து வைத்து பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் விராலிப்பட்டி சதீஷ்குமார், எம்.வாடிப்பட்டி சதீஷ்குமார், கோபால், பாண்டி ராதா, சுதாகர், குமரேசன், குமார், ஒப்பந்தகாரர் தவமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் பிரபு நன்றி கூறினார்.
வத்தலக்குண்டு ரெங்கப்பநாயக்கன்பட்டியில் புதிய நாடக மேடை திறப்பு
previous post