கோவை, மே 27: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிஜிபி சைலேந்திரபாபு, கோவை நகரில் நகை பறிப்பு, திருட்டு, கொள்ளை வழக்குகளில் மீட்கப்பட்ட நகைகளை உரிமையாளர்களிடம் வழங்கினார்.அதன்படி, 2 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் 14 பேர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், 134 செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடமும், ரூ.3 லட்சம் ரொக்கம் ஒருவரிடமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய பெண் போலீசார் உள்பட 81 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.