தூத்துக்குடி, மார்ச் 22: தூத்துக்குடி பிரையண்ட் நகர் 10வது தெருவை சேர்ந்தவர் முத்துசாமி(75). கடந்த மார்ச் 15ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.