கூடலூர் மே 14: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் கூடலூரில் காங்கிரசார் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் விமரிசையாக கொண்டாடினர். நீலகிரி மாவட்டம், கூடலூரில், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் கோசி பேபி தலைமையில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, நிர்வாகிகள் அம்சா, சபி, அசரப், செய்து முகமது, சிவராஜ், ரவி, அசைனார், இபினு, மண்டபம் சாஜி, அப்துல் ரகுமான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரசார், கட்சி அலுவலக வளாகத்தின் முன்பு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். பின்னர், அங்கிருந்து பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை வரை ஊர்வலமாக சென்றனர். அங்கு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.