ஓசூர், ஏப்.11: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த உளியாளம் ஏரியில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. அந்த பகுதியில் ஆடு மேய்க்காக சென்றவர்கள், இதுபற்றி நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில், போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மர்ம நபர்கள் அவரை கொலை செய்து விட்டு, பின்னர் சடலத்தை இங்கு வீசிச்சென்றனரா என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கர்நாடகா மற்றும் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏரியில் வாலிபர் சடலம் மீட்பு
previous post