சிவகங்கை மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட புதுக்கோட்டை மாவட்டம், மேல்நிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில் பழனியப்பனின் வேட்பு மனு ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘நான் ஒரு ரகசியத்தை உடைத்து வெளியே சொல்லப்போகிறேன்.
இதனால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். இந்தியா முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் சுயேட்சையாக போட்டியிடும் அனைவரும் ஒரு குழு அமைத்து பேசி முடிவு செய்துள்ளோம். அதில் நான் தான் பிரதமர் வேட்பாளர். பாஜ, காங்கிரசுக்கு மாற்றாக எங்கள் அணி மாறப்போகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் 10க்கும் மேற்பட்ட சுயேட்சைகள் போட்டியிடுகிறோம்.
எல்லோரும் ஒன்றிணைந்துள்ளோம். தனிமரம் தோப்பாகாது. ஒன்று சேர்ந்து போனா புரட்சி ஏற்படும் என்று முடிவு செய்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதை ஏன் முன்பே சொல்லலேன்னா சொன்னா விலை பேசிடுவாங்க. அதனால் ரகசியமாக வைத்திருந்தேன்,’என்று பேசி கலகலப்பூட்டினார். இவ்வாறு தெரிவித்தார்.