Wednesday, May 15, 2024
Home » பவன் கல்யாணை சந்தித்த ஒய்.எஸ்.ஆர். காங். எம்.பி.: ஆந்திர அரசியலில் பரபரப்பு

பவன் கல்யாணை சந்தித்த ஒய்.எஸ்.ஆர். காங். எம்.பி.: ஆந்திர அரசியலில் பரபரப்பு

by Ranjith

திருமலை: மசூலிப்பட்டினம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி. வல்லபனேனி பாலசவுரி, ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி. வல்லபனேனி பாலசவுரி, ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் செயல்படுகளில் சமீப காலமாக விலகி இருந்த பாலசவுரி தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஜெகன்மோகன் படத்தை நீக்கியதுடன் கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் இல்லை என தனது ஆதரவாளர்களிடம் கூறி வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் அக்கட்சியில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து ஜனசேனாவில் இணையப்போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக பவன் கல்யாணை சந்தித்தார். இதனால் ஒருங்கிணைந்த கிருஷ்ணா மாவட்ட அரசியல் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் அவர் ஜனசேனா கட்சியில் பண்டாருவில் இருந்து களம் இறங்குவாரா, அல்லது சொந்த ஊரான குண்டூரில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

You may also like

Leave a Comment

twelve − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi