Saturday, May 11, 2024
Home » திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலின் மீது ஏறிய போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலின் மீது ஏறிய போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

by Arun Kumar

திருவொற்றியூர்: சரக்கு ரயிலின் மீது ஏறியபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார்.சென்னை திருவொற்றியூர் ஏகவள்ளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆதர்ஷ் (26). இவர் தி.நகரில் உள்ள நீட் தேர்வு மையத்தில் படித்துவந்தார். தினமும் ரயில் மூலம் சென்று படித்துவந்தார். வழக்கம்போல் இன்று காலை தி.நகர் செல்வதற்காக திருவொற்றியூர் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.

அப்போது அங்கு கூட்ஸ் ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததால் தண்டவாளத்தை கடப்பதற்காக சரக்கு ரயில் மீது ஏறியுள்ளார். அப்போது மேலே சென்ற உயரழுத்த மின்கம்பி மீது உரசியதில் ஆதர்ஷ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுபற்றி அறிந்ததும் ரயில்வே போலீசார் வந்து ஆதர்ஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

eight − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi