புதுக்கோட்டை: கீரனூர் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் விக்னேஸ்வரன் இரும்புக் கம்பியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். மேட்டுப்பட்டி பிடாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக கூறப்படுகிறது. தனியார் வங்கி உதவிமேலாளராக இருந்த விக்னேஸ்வரனை கொன்ற நபர்களை பிடிக்கக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கீரனூர் அரசு மருத்துவமனை கண்ணாடிகள் உடைக்கப்பட்ட நிலையில் ராமலிங்கம் என்பவர் கைது-6பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.