Thursday, May 16, 2024
Home » எனக்கு இன்னும் வயசாகவில்லை: 83 வயதான சரத்பவார் தடாலடி

எனக்கு இன்னும் வயசாகவில்லை: 83 வயதான சரத்பவார் தடாலடி

by Neethimaan


புனே: பல்வேறு கேலி, கிண்டலுக்கு மத்தியில், தனக்கு இன்னும் வயதாகவில்லை என்று 83 வயதான சரத்பவார் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த மாட்டு வண்டி பந்தய போட்டி தொடக்க நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (83) கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘எனக்கு இன்னும் வயதாகவில்லை. உடல் பலமானவர்களை தூக்கி பிடிக்கும் அளவுக்கு எனக்கு சக்தி இருக்கிறது’ என்றார்.

முன்னதாக சரத் பவாருக்கு வயதாகி விட்டதால், அவரால் கட்சிப் பணிகளை தொடர முடியவில்லை என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உட்பட பல தலைவர்கள் விமர்சித்து வந்தார்கள். அவர்களின் கேலி, விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில், தனக்கு இன்னும் வயதாகவில்லை என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார். 83 வயதான சரத்பவார், தனக்கு இன்னும் வயதாகவில்லை என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

You may also like

Leave a Comment

seventeen − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi