இந்தியாவின் உணவு பதப்படுத்தும் துறை “சூரிய உதய” தொழிலாக உருவெடுத்துள்ளதாகவும், கடந்த ஒன்பது ஆண்டுகளில் ரூ.50,000 கோடி அன்னிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) ஈர்த்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார். தலைநகர் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற உலக உணவு இந்தியாவின் இரண்டாவது பதிப்பில் பிரதமர் மோடி உரையாற்றினார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழா நவம்பர் 5ஆம் தேதி நிறைவடைகிறது.