Tuesday, May 21, 2024
Home » மகளிர் உரிமை திட்டத்தில் 8 மாதங்களில் 1.15 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வீதம் ரூ.9,200 கோடி வழங்கி உள்ளோம்: திமுக பெருமிதம்

மகளிர் உரிமை திட்டத்தில் 8 மாதங்களில் 1.15 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வீதம் ரூ.9,200 கோடி வழங்கி உள்ளோம்: திமுக பெருமிதம்

by Lavanya
Published: Last Updated on

சென்னை: மகளிர் உரிமை திட்டத்தில் 8 மாதங்களில் 1.15 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வீதம் ரூ.9,200 கோடி வழங்கி உள்ளோம் என திராவிட முன்னேற்ற கழகம் பெருமிதம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம்” எனும் முண்டாசு கவிஞன் மகாகவி பாரதியார் முரசொலித்ததற்கேற்ப, தமிழ்நாட்டில் பெண்களின் நலன்களைப் பேணுவதிலும் சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும், கல்வி உள்ளிட்ட பல நிலைகளிலும் மேம்பட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்ப்பில் முத்தமிழறிஞர் கலைவர் எண்ணற்ற பல திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கவ்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்பிலும், இட ஒதுக்கீடு பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட பல திட்டங்கள் இன்றளவும் பெண்களுக்கு பெருமையும், அங்கீகாரத்தையும் தந்துள்ளது என்றால் அது மிகையல்ல. அவரது வழியில் அயராத உழைப்பில் இன்று ஆட்சி பொறுப்பில் அமர்ந்துள்ள திராவிட மாடல் நாயகன் தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் இந்தியாவிற்கே வழிகாட்டுகின்ற வழியில், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

பெண்கள் நலனில் எந்நாளும் அக்கறை கொண்டுள்ள இந்த அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புமிக்க திட்டங்களான: அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்யும் விடியல் பயண திட்டம், பள்ளி மாணவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1,000/- வழங்கிடும் புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வர் திட்டம் ஆகிய திட்டங்களின் வரிசைகளில், சமுதாயத்தில் வெற்றிப்பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால் ஒரு பெண் அவள் இருக்கிறார் என்கின்ற நிலையினை மாற்றியமைக்கின்ற வகையில் ஒரு தாயாக, சகோதரியாக, மனைவியாக பல அவதாரங்களில் பல மணி நேரம் தன் அளப்பரிய உழைப்பினை வழங்கி குடும்பத்தையும் நாட்டினையும் முன்னேற்றிட அரும்பாடுபட்டு வருகின்றார்களே அத்தகைய மகளிரின் மாண்பினைப் போற்றி, அங்கிகரிக்கின்ற வகையில் சமுதாயத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ள மாபெரும் திட்டமே இந்த “கலைஞர் மகளீர் உரிமைத் தொகை திட்டம்” .

இத் திட்டம் குறித்த அறிவிப்பினை திராவிட மாடல் நாயகன் தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் கடந்த 27.3.2023 அன்று சட்டமன்றத்தில் வெளியிட்டு ஆற்றிய உரையில்,“சுயமரியாதைக் கொள்கையில் தந்தை பெரியார், இனமான எழுச்சியில் பெருந்தகை அண்ணா, நவீன தமிழகத்தைக் கட்டமைப்பதில் தலைவர், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வருத்தளிந்த தமிழ்நாட்டை வளமான வலிமையான மாநிலமாக உருவாக்கி அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்திடச் செய்திடும் வகையில் சமூகம், அரசியல், பொருளாதாரம், மக்கள் மேம்பாடு அனைத்திலும் நவீன மயம் என்கிற திராவிட மாடல் ஆட்சியில், இந்த நூற்றாண்டின் மகத்தான திட்டமான ‘மகளிர் உரிமைத் தொகை’ குறித்த அறிவிப்பு வெளியாகி, நாடெங்கும். ஏன், உலகெங்கும் இருக்கக்கூடிய பொருளாதார வல்லுநர்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால், தாய்வழிச் சமூக முறைதான் மனிதகுலத்தை முதலில் வழிநடத்தி வந்திருக்கிறது என்ற உண்மை தெரியவரும்.

காலப்போக்கில், மதத்தின் பெயராலும், பழமையான மரபுகளின் பெயராலும், பல்வேறு ஆதிக்க வர்க்கத்தாலும் பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டு, கல்வியறிவு மறுக்கப்பட்டது. பெண்குலத்தின் உழைப்பு நிராகரிக்கப்பட்டது. பூட்டிய இரும்புக் கூட்டின் கதவினைத் திறந்து, பெண் அடிமைத்தனத்தைத் தகர்த்து, அவர்களுக்கான சமூக, பொருளாதார சுதந்திரத்தை மீட்க எத்தனையோ சமூக சீர்திருத்தவாதிகள் முன்வந்தாலும், இருபதாம் நூற்றாண்டினுடைய தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமே வீறுகொண்ட போராட்டங்களின் மூலமாக பெண் விடுதலைக்குப் பாதை அமைத்தது. நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி, கடந்த ஒரு நூற்றாண்டு காலம் திராவிட இயக்கம் அயராது பணியாற்றியதன் விளைவு இன்று பள்ளி, கல்லூரிப் படிப்புகளில் மாணவிகள் அதிகம் நுழைந்து, அரசு பணியாளர் தேர்வுகளில் பெண்கள் அதிகம் தேர்ச்சி பெறுவது தமிழ் சமுகத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

இன்றளவு ஏழை மக்களின் குடும்பங்களிலும், கிராமப்பொருளாதாரத்தை சுமக்கும் முதுகெலும்பாகவும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. வேலையிலும், ஊதியத்திலும், சமூகப் இடைவெளியும் வேறுபாடும் ஒருசில இடத்தில் இருந்தாலும், ஆணின் உழைப்புக்கு எந்தவிதத்திலும் பெண்கள் குறைந்தவர்கள் அல்லர் என்பது நம் கண் முன்னால் திருபிக்கப்பட்டு வருகிறது. கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அரசு அங்கீகரித்தால், ஆண்களை உள்ளடக்கிய இந்தச் சமூகமும் பெண்களுக்கான சமஉரிமையை வழங்கிடும் நிலை விரைவில் உருவாகிடும் என்று நமது அரசு உறுதியாக நம்புகிறது. எனவேதான், இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் ‘மகளிர் உரிமைத்தொகை என்று கவனத்துடன் பெயரிடப்படிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

பேரறிஞர் அண்ணா பிறந்த நன்னாளாம் செப்டம்பர் திங்கள் 15ஆம் நாள், 2023 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் திராவிட மாடல் நாயகனும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்கள். பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் 2022 ஆம் ஆண்டு தரவுகளின் படி இந்தியாவில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் 23.97 சதவீதமாகும். தமிழ்நாட்டில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் 28.5 ஆக உள்ளது. இது தேசிய சராசரியைவிட அதிகமாகும் 2022-2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பொருளாதார ஆய்வு அறிக்கைபடி தமிழ்நாட்டில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்த நிலைக்குக் காரணம் திராவிட மாடல் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெண் நலன்கள் சார்ந்த திட்டமே இதற்கு பிரதான காரணம் என்றால் அது மிகையாகாது தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்ட இந்த திட்டத்தின் மூலம் நாளது வரையில் ஏறத்தாழ 1 கோடியே 15 லட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டு ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 15.9.2023 முதல் 8 மாதங்களில் 1 கோடியே 15லட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் இதுவரை மொத்தம் 9,200 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, திராவிட நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தில் இந்திய வரலாறு காணாத மாபெரும் சமுதாய புரட்சித் திட்டம் எனப் பாராட்டுகளை குவித்துள்ளது. பயன்பெற்ற மகளிர் இது எங்கள் அண்ணன் முதலமைச்சர் கொடுத்த தாய்வீட்டுச் சீதனம் என்று பூரிப்புடன் கூறி மகிழ்கிறார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

17 − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi