இம்பால்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் இரு சமூகத்தினரிடையே வெடித்த இனமோதல் முடிவுக்கு வந்தாலும், அவ்வப்போது துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் உயிரிழப்புகளும் தொடர்கின்றன. இந்நிலையில் மணிப்பூரில் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீவிரவாதிகளுக்கு அதிகளவில் வெடிமருந்துகள் கிடைப்பதை ஒன்றிய அரசும், அதன் பாதுகாப்பு நிறுவனங்களும் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தி தலைநகர் இம்பாலில் பெண்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு இம்பாலின் தவுபால், குரை லாம்லாங், கொங்பா, லிலாங், பிஷ்னுபூரின் மொய்ராங், லாம்காய் ஆகிய பகுதிகளிலும் ஏராளமான பெண்கள் போராட்டம் நடத்தினர்.