தூத்துக்குடி : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அமைச்சுப் பணியாளர்கள், மகளிர் காவல் துறையினர் மற்றும் அனைத்து பெண்களுக்கும் எஸ்பி பாலாஜி சரவணன் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் என பெண் அமைச்சுப்பணியாளர்கள் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு எஸ்பி பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது எஸ்பி மகளிர் அமைச்சுப்பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி அனைத்து வகையான செல்வங்களுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு வாழவும், சிறப்பாக பணியாற்றவும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர் அனைத்து மகளிர் காவல் துறையினர் மற்றும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.