சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டம் தலைமுறை தலைமுறைக்கும் பயன் அளிக்கும் திட்டம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது. மகளிருக்கு மகுடம் சூட்டும் வகையில் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.