Monday, May 27, 2024
Home » பெண் முந்திரி தொழிலாளி வீட்டில் நகை திருடியவர் கைது

பெண் முந்திரி தொழிலாளி வீட்டில் நகை திருடியவர் கைது

by Lakshmipathi

பண்ருட்டி : பண்ருட்டி அருகே முத்துநாராயணபுரம் பாலூர் மெயின் ரோட்டைச் சேர்ந்த அய்யனார். இவரது மனைவி செல்வி (32). இவரது கணவர் கடந்த 3 வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். செல்வி நடுக்குப்பத்தில் உள்ள முந்திரி கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன்கள் இருவரும் கடலூர் செம்மண்டலம் அரசு ஐடிஐயில் படித்து வருகிறார்கள்.

இவரது மகள் செல்வகுமாரி பட்டாம்பாக்கம் போர்டிங் பள்ளியில் +2 அங்கேயே தங்கி படித்து வருகின்றார். செல்வி கடந்த 5ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு நடுக்குப்பத்தில் உள்ள அக்கா சிவசக்தி வீட்டில் மகன்களுடன் தங்கிவிட்டார். கடந்த 9ம் தேதி காலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது இவரது வீட்டின் பின் பக்கமுள்ள கீற்றினை பிரித்து யாரோ வீட்டினுள் நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் செயின், 2 கிராம் சுத்து மாட்டல் 1 ஜோடி, 2 ஜோடி கொலுசு ஆகிவைகளை திருடி சென்றது தெரிய வந்ததுஇதுகுறித்து பண்ருட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிரவிசாரணையில் அதே ஊரை சேர்ந்த முத்தாலு(35) என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தஅவரை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

two + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi