புதுச்சேரி: வில்லியனூர் பாஜக பிரமுகர் செந்தில் குமரன் கொலை செய்யப்பட்ட வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கின் அனைத்து ஆவணங்களும் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டதாக முதுநிலை எஸ்.பி. நாரா சைதன்யா தெரிவித்துள்ளார். மார்ச் 26ல் பாஜக பிரமுகர் செந்தில்குமரன் வெடிகுண்டு வீசி, வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.