நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் மழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நெல்லை தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்க வைக்கபட்டுள்ளனர். பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து நீர் திறப்பு, காட்டாற்று வெள்ளம் என தாமிரபரணி ஆற்றில் 80,000 கனஅடி தண்ணீர் செல்கிறது.