Tuesday, May 21, 2024
Home » மேற்குவங்க தேர்தல் வன்முறை பலி 52 ஆக அதிகரிப்பு; பாஜக முகவரின் முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்டதா?: ஆளும் திரிணாமுல் தொண்டர்கள் மீது குற்றச்சாட்டு

மேற்குவங்க தேர்தல் வன்முறை பலி 52 ஆக அதிகரிப்பு; பாஜக முகவரின் முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்டதா?: ஆளும் திரிணாமுல் தொண்டர்கள் மீது குற்றச்சாட்டு

by Suresh

கொல்கத்தா: மேற்குவங்க தேர்தல் வன்முறை பலி 52 ஆக அதிகரித்த நிலையில், பாஜக வாக்குச்சாவடி முகவரின் முகத்தில் திரிணாமுல் தொண்டர்கள் சிறுநீர் கழித்ததாக எழுந்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேற்குவங்கத்தில் கடந்த ஜூன் 8ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்கள், அதன்பின் நடந்த மறுவாக்குப்பதிவுகள், தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது வரை ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்தவண்ணம் உள்ளன.

ஆளும் திரிணாமுல், எதிர்கட்சிகளான பாஜக, காங்கிரஸ், இடதுசாரி ெதாண்டர்களுக்கு இடையே வன்முறை சம்பவங்கள் நடப்பதால், இவையாவும் தேர்தல் அரசியல் வன்முறையாக பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று மேலும் இருவர் பலியானதுடன் சேர்த்து இதுவரை 52 பேர் தேர்தல் வன்முறையில் பலியாகியுள்ளனர். நேற்று ெமதினிபூர் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், பாஜக வாக்குச்சாவடி முகவரைத் தாக்கிய பின்னர், அவரது முகத்தில் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது. அதாவது பாஜக தொண்டர் பாருன் ரூயிடாஸை கடத்திச் சென்ற திரிணாமுல் தொண்டர்கள், அவரை குறிப்பிட்ட இடத்தில் வைத்து தாக்கியுள்ளனர்.

அவர் தண்ணீர் கேட்டபோது, அவரது முகத்தில் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாருன் ரூய்டாசை, உள்ளூர் தலைவர் சமித் தாஸ் தலைமையிலான தூதுக்குழுவினர் சந்தித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து மருத்துவமனைக்கு வெளியே நிருபர்களின் பேசிய சமித் தாஸ், ‘திரிணாமுல் தொண்டர்கள் சிலர், எங்களது வாக்குச்சாவடி முகவர் பாருன் ரூய்டாஸிடம் பணம் கேட்டனர். அவர் பணம் கொடுக்க மறுத்தார். அதனால் அவரைக் கடத்திச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவர் தண்ணீர் கேட்டபோது, போதையில் இருந்த திரிணாமுல் தொழிலாளர்கள் அவரது முகத்தில் சிறுநீர் கழித்தனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளோம்’ என்றார். இதுகுறித்து மெதினிபூர் போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதால், விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

You may also like

Leave a Comment

two + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi