டெல்லி: மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா, நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தராகண்ட், சத்தீஸ்கர், பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் முதல் மீண்டும் படிப்படியாக குறைய தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.