சென்னை: நடிகர் விஷால் செலுத்த வேண்டிய ரூ.21.29 கோடி கடனை திரும்ப தரவில்லை என லைகா நிறுவனம் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் தனக்கும், லைகாவுக்கும் இடையேயான பண பரிவர்த்தனையை ஆய்வு செய்ய ஆடிட்டரை நியமிக்க விஷால் தரப்பு கோரிக்கை வைத்துள்ளனர். ஆடிட்டரை நியமிக்க வேண்டும் என்ற விஷால் கோரிக்கையை ஏற்பதாக லைகா பட நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆடிட்டர் யார் என அறிவிப்பதாகக் கூறி வழக்கு விசாரணையை ஜன.30-க்கு நீதிபதி பி.டி.ஆஷா ஒத்திவைத்தார்.