சென்னை : சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாட்களாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது. முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
*விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.500 கோடி மதிப்பில் 6,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் காலணி ஆலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். Feng Tay காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
*கள்ளக்குறிச்சியில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ₹2302 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் இந்த ஆலையால் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு அமையும்.
*பெரம்பலூரில் ₹48 கோடி மதிப்பில் அமையவுள்ள காலணி ஆலை மூலம் 150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
*டாடா பவர்ஸ் நிறுவனம் இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் செய்யாத அளவுக்கு தமிழ்நாட்டின் நெல்லையில் ₹70,800 கோடி முதலீடு செய்கிறது; சோலார், காற்றாலை திட்டங்களை செயல்படுத்த உள்ளது
*எரிசக்தி துறையில் ரூ.1.75 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது. சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 37 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
*எரிசக்தி துறையில் புதிய முதலீடுகளின் மூலம் 12,567 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எரிசக்தி துறையில் புதிய முதலீடுகள் மூலம் 18,000-க்கும் மேற்பட்ட மெகாவாட் மின் உற்பத்தி கூடுதலாக மேற்கொள்ளப்படும்.
*சிபிசிஎல் நாகையில் பெட்ரோகெமிக்கல் திட்டத்திற்கு ₹17,000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
*ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ₹100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 1,500பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
*மஹேந்திரா நிறுவனத்துடன் ₹1,800 கோடியில் 4,000 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
*சென்னையில் L&T நிறுவனம் ₹3,500 கோடியில் ஐடி பார்க் அமைக்கிறது; 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு
*பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்க காவிரி மருத்துவமனை ரூ.1,200 கோடியில் ஒப்பந்தம்
போட்டுள்ளது.
*தமிழ்நாட்டில் ஜவுளித்துறையில் ராம்ராஜ் நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்து. ராம்ராஜ் நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்வதால் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும்.
*தமிழ்நாட்டில் ஆச்சி மசாலா நிறுவனம் ரூ.100 கோடி முதலீடு செய்ய உள்ளது.
*தமிழகத்தில் அதானி குழுமம் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பசுமை எரிசக்தி துறையில் ₹24,500 கோடி முதலீட்டின் மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
*தூத்துக்குடியில் ₹36,238 கோடியில் ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. புதிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை மூலம் 1,511 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
*லீப் கிரீன் எனர்ஜி நிறுவனம் ரூ.22,842 கோடி முதலீடு; செம்கார்ப் நிறுவனம் ரூ.36,238 கோடி முதலீடு செய்கிறது.போயிங் நிறுவனம் ரூ.300 கோடி முதலீடு
*ஷெல் மார்க்கெட் நிறுவனம் ரூ.1,070 கோடி முதலீடு; சிபிசில் நிறுவனம் ரூ.17,000 கோடி முதலீடு; 2,400 பேருக்கு வேலை.
*ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ரூ.3,000 கோடி முதலீடு; 2,000 பேருக்கு வேலை; சால்காம்ப் நிறுவனம் ரூ.2,271 கோடி முதலீடு.டஃபே நிறுவனம் ரூ.500 கோடி முதலீடு; 1,000 பேருக்கு வேலை; ஸ்டெல்லான்டிஸ் நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு.
*ஹிந்துஜா குழுமம் ரூ.1,200 கோடி முதலீடு; 500 பேருக்கு வேலை; மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ரூ.2,740 கோடி முதலீடு.டாடா கெமிக்கல்ஸ் ரூ.1,000 கோடி முதலீடு; 500 பேருக்கு வேலை; ராம்கோ சிமென்ட் ரூ.999 கோடி முதலீடு செய்கிறது.
*அதானி குழுமம் ரூ.42,700 கோடி முதலீடு; பெங்களூரு ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் ரூ.1,000 கோடி முதலீடு; 22,000 பேருக்கு வேலை.