சென்னை : கேப்டன் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் கண்ணீர் மல்க இறுதி சடங்குகளை செய்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “பொது இடத்தில் விஜயகாந்துக்கு சிலை, மணிமண்டபம் அழைக்க அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்; எந்த கட்டுப்பாடும் இல்லை,’என்றார்.