Tuesday, May 14, 2024
Home » தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் தமிழக அரசு சார்பில் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்பு..!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் தமிழக அரசு சார்பில் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்பு..!!

by Nithya
Published: Last Updated on

சென்னை: விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் தமிழக அரசு சார்பில் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்த நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் இன்று சென்னை தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர்களின் அஞ்சலிக்கு பிறகு உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் தமிழக அரசு சார்பில் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன் அரசு சார்பில் இறுதிச்சடங்கில் பங்கேற்பர். சென்னை தீவுத்திடலில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தொடங்க உள்ளது. தீவுத்திடலில் இருந்து ஈ.வெ.ரா. பெரியார் சாலை வழியாக கோயம்பேடு நோக்கி விஜயகாந்த் இறுதி ஊர்வலம் செல்ல உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடலுக்கு மாலை 4.45 மணி அளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

You may also like

Leave a Comment

one × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi