சென்னை: சினிமா, அரசியல் இரண்டிலும் இரு துருவங்களை எதிர்கொண்ட ஆச்சர்யம் விஜயகாந்த் என்று லிங்குசாமி புகழாரம் சூட்டியுள்ளார். நீ இன்ஸ்டியூட்டில் பயிலவில்லை; இன்ஸ்டியூட்டில் பயின்ற பலரை இயக்குநராக்கியிருக்கிறாய். மக்களின் கண்ணீரை உணர்ந்தவன் நீ, எதிரே நிற்பவர் பசி அறிந்தவன் நீ. இதயத்திலிருந்தே எல்லா முடிவுகளையும் எடுத்தாய், அதனாலேயே பல இதயங்களை வென்றாய் என்று அவர் கூறியுள்ளார்.