சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். விஜயகாந்தின் இறுதி மரியாதை இன்று மாலை 4.45 மணிக்கு கோயம்பேட்டில் தேமுதிக அலுவலகத்தில் நடைபெறும். சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் ஆகியோருக்கு ஆளுநர் ரவி ஆறுதல் கூறினார்.