புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு டிசம்பர் 20-க்கு ஒத்திவைக்கப்பட்டது. அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி மீது வழக்கு தொடரப்பட்டது. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் சி.விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை. விஜயபாஸ்கர், அவரது மனைவிக்கு பதிலாக அவர் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.