சென்னை: மதுராந்தகத்தில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியான விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பது குறித்து, பொதுநல வழக்கு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. மாணவர்கள் பலியான விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையிட்டார். மேலும் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.