வேலூர்: வேலூர் காட்டோன்மென்ட் சென்னை பீச் வரை செல்லும் மின்சார ரயில் திருவள்ளூர் செஞ்சி பனப்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென காட் பெட்டி கீழ் அதிக அளவில் சத்தம் வந்ததால் உடனடியாக வண்டி நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் ஆய்வு செய்த போது பெட்டியில் இருந்து அதிக அளவில் புகை வந்ததால் ரயில் பயணிகள் அச்சத்தோடு இறங்கினர். பின்னால் ரயிலை மெதுவாக திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டு ரயில் சரி செய்யப்பட்டு ரயில் பீச் நோக்கி சென்றது.