வேலூர்: குடியாத்தம் அருகே பாலம் அமைக்கத் தோண்டிய பள்ளத்தில் விழுந்து மூதாட்டி உயிரிழந்தார். சந்தைப்பேட்டையில் கவுண்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டது. தோண்டப்பட்ட பள்ளத்தில் நீலம்மாள்(65) என்ற மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடடர்த்தி வருகின்றனர்.