Wednesday, May 15, 2024
Home » வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா மீட்பு: திமுக வட்ட செயலாளருக்கு நன்றி

வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா மீட்பு: திமுக வட்ட செயலாளருக்கு நன்றி

by MuthuKumar

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகை நமீதா, கணவர், இரட்டைக் குழந்தைகளை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். இதற்கு உதவிய திமுக வட்டச் செயலாளருக்கு அவர் நன்றி தெரிவித்தார். சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள எக்ரட் பார்க் என்ற குடியிருப்பு வளாகத்தில் நடிகை நமீதா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

மிக்ஜாம் புயலில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சென்னையின் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் தீயணைப்புத்துறை, காவல்துறை, தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஒருநாளில் பெய்த அதிகப்படியான மழை காரணமாக பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்து அருகில் பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் நடிகை நமீதா வசித்து வந்த துரைப்பாக்கம் எக்ரட் பார்க் குடியிருப்பில் 6 அடி உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்தது. இந்த குடியிருப்பில் தனது இரட்டை குழந்தைகள் மற்றும் கணவருடன் வசித்து வந்த நடிகை நமீதாவுக்கு அந்த பகுதியில் இருந்தவர்கள் உதவி செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை அந்த பகுதி திமுக வட்ட செயலாளர் ஆனந்த் பால், உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி வந்தார். அப்போது நடிகை நமீதாவிற்கும் நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் உதவிகள் ஏதும் வேண்டுமா என்று அவர் கேட்டபோது அங்கிருந்து வெளியேற வேண்டும் என நமீதா கூறியுள்ளார். இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகை நமீதா, கணவர், இரட்டைக் குழந்தைகள், நாய்க்குட்டிகளை படகில் சென்ற தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.மீட்கப்பட்ட பின் நடிகை நமீதா கூறுகையில், கடந்த 3 நாட்களாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவி செய்தனர். குழந்தைகள் இருப்பதால் தொடர்ந்து இங்கே இருக்க முடியாத சூழல் நிலவியது. எங்களை தவிர இங்கு குடியிருந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.

நாய்க்குட்டிகள் இருப்பதால் இங்கு இருந்து வெளியேற முடியாமல் இருந்தது. ஓட்டல்களில் செல்ல பிராணிகளை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும். தற்போது எங்களின் உறவினர் ஒருவர் வீட்டிற்கு செல்கிறோம். எங்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் திமுக நிர்வாகி ஆனந்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

You may also like

Leave a Comment

four + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi