சென்னை: வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி பகுதியில் படகில் சென்று சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். பைபர் படகில் சென்று மக்களுக்கு மருந்துப் பொருட்கள் வழங்கி, ககன்தீப் சிங் பேடி குறைகளையும் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி வழங்க 160 நடமாடும் மருத்துவ மையங்கள் இயங்கி வருகின்றன. மழைநீர் முழுமையாக வடிந்த பிறகு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.