வால்பாறை: வால்பாறை பூங்காவில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட பறவை மற்றும் விலங்குகளின் உருவம் உலோக தகடில் வைக்கப்பட்டு உள்ளது சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது.வால்பாறை காமராஜ் நகரில் நகராட்சி பூங்கா உள்ளது. சமீபமாக பூங்காவில் புதிய பூஞ்செடிகள் நடவு செய்யப்பட்டது.
இந்நிலையில் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட தகடுகளில் உருவாக்கப்பட்ட வரையாடு, வண்ணத்துப்பூச்சி, இருவாச்சி பறவை, குரங்கு உள்ளிட்ட உருவங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது.இந்நிலையில் பூங்கா சாலை, மற்றும் வாகன நிறுத்தம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.