சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜாக்களின் விலை கடும் உயர்வு ஏறப்பட்டது. நாடு முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் ரெட் ரோஸ் ஒரு கட்டு நேற்றுமுன்தினம் ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.350க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்றுமுன்தினம் கலர் ரோஸ் ஒரு கட்டு ரூ.250க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ. 300க்கு விற்பனை செய்யப்பட்டது.